ஆற்காட்டில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
![ஆற்காட்டில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்காட்டில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி](https://king24x7.com/h-upload/2024/03/08/426861-1001113605.webp)
ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று மாவட்ட மகளிர் திட்டத் துறையின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவு செய்வேன், என்னுடைய வாக்கு விற்பனை செய்ய மாட்டேன், வாக்குக்கு பொருட்கள் வாங்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரங்கோலி கோலம் போட்டு தேர்தல் குறித்தான விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உட்பட அரசு அலுவலர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்..