தேர்தல் பத்திர விவகாரம் : எஸ்பிஐயை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திர விவகாரம் : எஸ்பிஐயை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
பாஜக - கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடிக்கு துணை போகும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியை கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகம், பாஜக - கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக்கு ஆதரவாக துணை போகக் கூடாது எனக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சாவூரில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.எம் தஞ்சை மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன் ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த தலைவர் என்.சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், ஆர்.கலைச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ஆர்.புண்ணியமூர்த்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி கி.வரதராஜன் மற்றும் சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story