சர்ச்சில் பிரச்சாரத்தால் வழிபட வந்தவர்கள் அவதி

சர்ச்சில் பிரச்சாரத்தால் வழிபட வந்தவர்கள் அவதி

தேர்தல் பிரசாரம் 

சிவகங்கையில் சர்ச்சுக்கு பிரார்த்தனை செய்ய வந்தவர்களிடம் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்கு கேட்டு தொந்தரவு படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் தேவாலயம். நேற்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்ய வருகை தந்திருந்தனர்.

திருப்பலி நடைபெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்சை ஆதரித்து சிவகங்கை நகரச் செயலாளர் ராஜா தலைமையிலும், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக திமுக நகரச் செயலாளர் துரை ஆனந்த் தலைமையிலும் வாயிலின் இரு புறங்களிலும் நின்று கொண்டு தங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேவாலயத்தில் வழிபாடு செய்ய வந்தவர்களை இரு அரசியல் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்த சம்பவம் சிலரை முகம் சுழிக்க வைத்தது.

Tags

Next Story