பேராவூரணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பரப்புரை

திமுக வேட்பாளரை ஆதரித்து சிபிஐ சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி - சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் தெருமுனைப் பிரச்சாரம் தொடங்கியது. பேராவூரணி அண்ணா சிலை அருகில் திங்கள்கிழமை காலை, பிரச்சாரப் பயணத்தை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினருமான நா.அசோக்குமார் துவக்கி வைத்தார். தி.மு.க தொகுதி பார்வையாளர் நாகை மனோகரன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பிரச்சாரப் பயணத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர்கள் துரை.பன்னீர்செல்வம், வீரமணி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.சித்திரவேலு, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.ரவி மற்றும் குழுவினர் பங்கேற்று, பேராவூரணி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Tags

Next Story