திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.....

திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.....

பொதுக்கூட்டம்

இந்தியா என்ற ஒரு பெருங்கடலில் 69% பெண்கள் உயர்கல்வி படிக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றால் அது திராவிட இயக்கம் கொடுத்த கொடை என தமிழன் பிரசன்னா புகழாரம்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிராமத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி.செல்வம் ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர், கழகச் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில், கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா அவர்கள் பேசுகையில், இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு கல்வி இலவசம், பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு என அறிவித்தவர் கலைஞரின் உதயசூரியன் ஆட்சி எனவும், இந்தியா என்ற ஒரு பெரும் கடலில் 69 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றால் அது திராவிட இயக்கம் கொடுத்த கொடை என புகழாரம் சூட்டினார்.

மேலும் இந்தியா காப்பாற்றப்பட வேண்டும், அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படவேண்டும் என்றால் நீங்கள் ஆதரிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன் எனவும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டம் கொளுத்தப்படும் எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு, ஒன்றிய கழக செயலாளர்கள் சிற்றரசு, பொன் சிவக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்த அய்யனார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story