கும்மிடிப்பூண்டி- ஆரம்பாக்கத்தில் சசிகாந்த் செந்தில் தேர்தல் பரப்புரை

கும்மிடிப்பூண்டி- ஆரம்பாக்கத்தில் சசிகாந்த் செந்தில் தேர்தல் பரப்புரை

தேர்தல் பரப்புரை

கும்மிடிப்பூண்டி- ஆரம்பாக்கம்-பல்லவாடாவில் சசிகாந்த் செந்தில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் .

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் பிரச்சாரக் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.அதனை தொடர்ந்து இன்று கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் ஆரம்பாக்கம் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னால் பன்னங்காட்டில் உள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து பரப்புரையை தொடங்கினார்.

பின் அங்குள்ள புனித வானதூதர்களின் அன்னை திருயாத்திரை திருத்தலத்திலும் வழிபாடு செய்தார்.பின் -பல்லவாடா ஊராட்சி பகுதியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.அப்போது TJ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருவள்ளூர் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான R.கிரிராஜன்,பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் துரை.சந்திரசேகர் MLA , முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.எஸ் சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் ஆர் எம் தாஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story