தேர்தல் எதிரொலி 21 தாசில்தார்கள் இடம் மாற்றம்!

தேர்தல் எதிரொலி 21 தாசில்தார்கள் இடம் மாற்றம்!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டையில் நிர்வாக நலன் கருதி 21 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டையில் நிர்வாக நலன் கருதி 21 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளது இதயொட்டி பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப் படுத்தி உள்ளது. முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள், சொந்த தொகுதியில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் போலீசார், அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 21 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சிரம்யா உத்தரவிட்டார்.

Tags

Next Story