ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

ரயில் நிலையத்தில் பயணிகளிடம்  தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

தேர்தல் பறக்கும் படை

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த பொதிகை ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் பயணிகளிடம் பணம் மற்றும் பரிசு பொருள்கள் உள்ளதா என அதிரடி சோதனை நடத்தினர் சோதனையின் போது பயணிகளின் அனைத்து உடைமைகளையும் திறந்து சோதனை மேற்கொண்டனர். இதனால் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story