ஆந்திர மாநில எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

ஆந்திர மாநில எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

வாகன சோதனை 

தமிழக ஆந்திர எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சைனகுண்டா பகுதியில் போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடி உள்ளது. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை உள்ளது. இந்த நிலையில் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா பகுதியில், ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பஸ், கார் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தீவிரமாக ஆய்வு செய்து அனுப்பினர்.

Tags

Next Story