உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

பணம் பறிமுதல் 

போளூர் அருகே ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் பைபாஸ் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் . சோதனையில் வேலூர் பரதராமி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வந்த வாகனத்தில் ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.64, 600 அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story