தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை. ரூபாய் 2.38 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை. ரூபாய் 2.38 லட்சம் பறிமுதல்

பறிமுதல்

குழித்துறை,மார்த்தாண்டம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 2.38 லட்சம் பறிமுதல்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தேர்தல் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று குழித்துறை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக சென்ற மீன் டெம்பாவை மடக்கி சோதனை செய்த போது ரூபாய் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது கேரளா பதிவான கொண்ட காரில் ரூ. 1 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்தை விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது, மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story