நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் சேலம் வருகை

நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் சேலம் வருகை

சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பொது பார்வையாளராக ஜி.பி.பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.


சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பொது பார்வையாளராக ஜி.பி.பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பொது பார்வையாளராக ஜி.பி.பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் சாரதா கல்லூரி சாலையில் உள்ள கூடுதல் சுற்றுலா மாளிகையில் அறை எண் 3-ல் உள்ள முகாம் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீலை நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். மேலும் அவரது 9489939101 என்ற செல்போன் எண்ணுக்கும், 15salempc@gmail.com மின்னஞ்சல்ன முகவரியிலும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story