பரமத்தி வேலூரில் தேர்தல் பார்வையாளர், எஸ்பி ஆய்வு

பரமத்தி வேலூரில்  தேர்தல் பார்வையாளர், எஸ்பி ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் தேர்தல் பார்வையாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அகியோர் ஆய்வு செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பார்வையாளர் உஷாராதா மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா ஆகியோர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களின் எல்லையான பரமத்திவேலூர் மற்றும் மோகனூர் காவிரி ஆற்று பாலம் அருகே உள்ள சோதனை சாவடிகளில் ஆய்வு நடத்தினர்.

அதனை தொடர்ந்து பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு, குப்பிச்சிபாளையம், பரமத்தி ஆகிய பகுதி பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பள்ளியின் வெளிப் பகுதியில் இருந்து பார்வையிட்டு தேர்தல் முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story