ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேர்வு 

கள்ளகுறிச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பார்கவ குல உடையார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சாசன தலைவர் S.S.வாசன் தலைமையில் துணை ஆளுநர் D. ராமலிங்கம், P. வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை சிறப்பு விருந்தினர் மாவட்ட தேர்வு ஆளுநர் P.சிவசுந்தரம் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.. முனைவர் M.செந்தில்குமார் தலைவராகவும், M.S. கோத்தம் சந்த் அவர்கள் செயலாளராகவும், TS.சௌந்தர்ராஜன் அவர்கள் பொருளாளராகவும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

புதிய உறுப்பினர்கள் 8 பேருக்கு ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.. மாவட்ட தேர்வு ஆளுநர் சேவைத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

( 1 )ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் 10 பேருக்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. (2.)ஆலூர் அரசாங்க பள்ளிக்கு கல்வி சேவைக்காக 11,000 மதிப்புள்ள LED தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது. (3)வித்யா மந்திர் பள்ளியில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் உயர்கல்வி தொடர இயலாத ஏழை மாணவியின் கல்வி செலவிற்கு ரூ 10500/ நன்கொடை வழங்கப்பட்டது.

Tags

Next Story