திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணி!

திருச்சியில் கணினி குலுக்கல் முறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணி!

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், கணினி குலுக்கல் முறையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணி, திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திரு.தினேஷ் குமார் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (08.04.2024) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), திரு.ச.சிவக்குமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story