லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

தேர்தல் அலுவலர் ஆய்வு 

லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024, சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், மண்டல அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story