லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

சென்ன, லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.  

சென்ன, லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி, சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு அறையினை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/மத்திய வட்டார துணை ஆணையாளர் ஜெ.பிரவீன் குமார், கூடுதல் காவல் ஆணையாளர் கபில் குமார் சரட்கர், இணை காவல் ஆணையாளர் (கிழக்கு) தர்மராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story