தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கொடி அணிவகுப்பு 

மரக்காணம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19- ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பதட்டமான பகுதி என்பதால் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையில், எல்லை பாதுகாப்புபடை 74 துணை கமான்டென்ட் எம்.எஸ் ராவத் மற்றும் மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு முன்னிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் 60 பேர், விழுப்புரம் ஆயுதப்படை வீரர்கள் 75 பேர்கள், கோட்டக்குப்பம் உட்கோட்ட போலீசார் 30 பேர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி வகுப்பானது மரக்காணம் திரவுபதியம்மன் கோவிலில் இருந்து பேரூந்து நிலையம் வழியாக தாலுக்கா அலுவலகம் சென்று நிறைவடைந்தது, இறுதியில் அனைத்து வீரர்களுக்கும் கோட்டகுப்பம் டி.எஸ்.பி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Tags

Next Story