தேர்தல் விதிகள்: வங்கி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

தேர்தல் விதிகள்: வங்கி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

 ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் தொடர்பாக வங்கிகள் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதைத்தொடர்ந்து இன்று (08.04.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வங்கிகள் தேர்தல் விதிகளைப் பின்பற்றி மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட அளவிலான வங்கி ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஸ்ரீஜூ, அஜய் ரூமல் கர்டே, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், வேட்பாளர்களின் தேர்தல் செலவினப் பொறுப்பு அலுவலர் முத்துக்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story