தேர்தல் விதிமீறல்: தஞ்சாவூர் எம்.எல்.ஏ., மேயர் மீது வழக்கு

தேர்தல் விதிமீறல்:  தஞ்சாவூர் எம்.எல்.ஏ., மேயர் மீது வழக்கு

கோப்பு படம் 

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக தஞ்சாவூர் எம்.எல்.ஏ., மேயர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர், மேயர் மீது வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி வைக்கோல்காரத் தெருவில் தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் வெள்ளிக்கிழமை மாலை பிரசாரம் செய்தனர்.

அப்போது, இருவரும் சென்ற காரிலும் மற்றும் அவர்களுடன் வந்த 20 இரு சக்கர வாகனங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக கொடி கட்டிக் கொண்டு பிரசாரம் செய்ததாக கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு புகார் செய்தார். இதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story