ம .நீ.ம மக்களைவை தேர்தல் மண்டல ஆலோசனை கூட்டம்

சென்னை போரூரில் நடந்த மக்கள் நீதி மையத்தின் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பான சென்னை, காஞ்சிபுரம் மண்டல கலந்தாலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்த சென்னை, காஞ்சிபுரம் மண்டல கலந்தாலோசனை கூட்டம் சென்னை போரூர், ஶ்ரீ அங்கு மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள் மௌரியா IPS., (ஓய்வு), R.தங்கவேலு, ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்தான வழிகாட்டுதலை வழங்கினார்கள். கமல்ஹாசன் ஆணைக்கிணங்க அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், மேற்கொள்ளும் பணிகளை முழுமூச்சுடன் செயல்படுத்தவும் தயாராக இருக்க வேண்டும் என்றும், இந்த வாரத்திலேயே தேர்தலுக்கான வார் ரூம் கட்சி அலுவலகத்தில் திறக்கப்படுமென்றும் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் அறிவித்தார். நிகழ்வில் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சென்னை காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட அமைப்பு மற்றும் அணிகளை சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story