திருவெண்ணெய்நல்லூரில் வாக்காளர் பட்டியல்: கலெக்டர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லூரில் வாக்காளர் பட்டியல்: கலெக்டர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து கலெக்டர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட அடுக்கம், ஆதிச்சனூர் மற் றும் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட சித்தலிங்கம டம், பாவந்தூர் ஆகிய கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக விண்ணப் பித்தவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, அதன் உண்மை நிலை குறித்து, மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

அப் போது அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்த ரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் 04.11.2023, 05.11.2023, 25.11.2023, 26.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பித்தனர். இதன் உண்மை நிலை குறித்து அறிந்திடும் வகையில்,

விண்ணப் பத்தவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதனடிப்படையில்,இன்று கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட அடுக்கம், ஆதிச்சனூர் கிராமம் மற்றும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தலிங்கமடம்,

பாவந்தூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளப்ட் டது என்றார். அப்போது கண்டாச்சிபுரம் வருவாய் தாசில்தார் கற்ப கம், திருவெண்ணெய்நல்லூர் வருவாய் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story