வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம் : கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம் : கலெக்டர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பணிகளில் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் நடைபெற்றது . அலுவலகங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது சரிபார்க்கப்பட்டு விண்ணப்பங்கள் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் அவர்கள் இறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களை காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம், பெரிய காஞ்சிபுரம், மளிகை தெரு மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் விண்ணப்பித்திருந்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று சிறப்பு சுருக்கமுறை (Super Check) சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டார்‘.

இந்த ஆய்வினைத் தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகளின் பதிவேட்டினை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story