ஆலங்குளம் அருகே மின் மோட்டாா் திருட்டு : 2 போ் கைது

ஆலங்குளம் அருகே மின் மோட்டாா் திருட்டு : 2 போ் கைது

பைல் படம் 

ஆலங்குளம் அருகே தோட்டத்திலிருந்து மின்மோட்டாரை திருடி சென்ற இருவரை கைது செய்த போலீசார் களவு போன மின்மோட்டாரை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆ.மருதப்புரத்தைச் சோ்ந்த முருகையா மகன் மாரித்துரை. கால்வாய்க் கரையில் உள்ள இவரது தோட்டத்திலிருந்த மின் மோட்டாரை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இதுதொடா்பான புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் வேல்முருகன் (25), ராமையா மகன் பரமசிவன் (46) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களிடமிருந்து மின் மோட்டாா் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்

Tags

Next Story