சாலைகள் நடுவே மின்கம்பம் - மாற்றி அமைக்க கோரிக்கை

சாலைகள் நடுவே மின்கம்பம் - மாற்றி அமைக்க கோரிக்கை
மாற்றி அமைக்கப்படாத மின் கம்பம் 

திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் வாகன அதிகரிப்பால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்படி விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. போக்குவரத்து நெரிசலான பல இடங்களில் டிரான்ஸ்பார்ம் கூட இடையூறாக பாதுகாப்பற்ற சூழலில்தான் உள்ளது.இந்த வேதனைக்கு மத்தியில் ரோட்டில் நிற்கும் மின்கம்பங்களுக்கு அடியில் குப்பை தொட்டிகளை வைப்பதால் மேலும் இடையூறை உருவாகி உள்ளது.சாலை விரிவாக்க பணியின் போதே மின்கம்பங்கள் அகற்றும் பணியையும் சேர்த்து ஒருசேர செய்து முடித்தால், பின்னாளில் அதற்கென செலவிடப்படும் நிதி சேமிப்பாவதுடன் ரோடு சேதமடைவதும் தவிர்க்கப்படும்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story