பொத்தனூர் மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மின் நிறுத்தம்.

பொத்தனூர் மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மின் நிறுத்தம்.

கோப்பு படம்


பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூர், மின் வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் விடுத்துள்ள விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேர் செல்லும் முக்கிய வீதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்ததுள்ளார்.

வரும் 27 ஆம் தேதி பொத்தனூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர் செல்லும் முக்கிய வீதிகளான நல்லாயி காட்டுத் தெரு, திருவள்ளுவர் சாலை, வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலை, வீராணம்பாளையம்‌ செல்லும் சாலை ( அரசு மேல்நிலைப்பள்ளி) ஆகிய பகுதிகளில் வரும் 27- ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்து குறிப்பில் கூறியுள்ளார்.

Tags

Next Story