சேலம் அருகே எலக்ட்ரீசியன் திடீர் சாவு

சேலம் அருகே எலக்ட்ரீசியன் திடீர் சாவு

எலக்ட்ரீசியன் சாவு

சேலம் மாவட்டம், செங்கரடு பகுதியில் எலக்ட்ரீசியன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம், கருப்பூர் தாத்தையங்கார்பட்டி, செங்கரடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது29). எலெக்ட்ரீசியன். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டில் எலெக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கார்த்திக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதை பார்த்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story