புதன்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

புதன்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

கோப்பு படம்


புதன்சந்தை பகுதியில் நாளை (07.11.23) மின் நிறுத்தம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நாளை (07.11.23) மின் நிறுத்தம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது நாமக்கல் வட்டாரத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரப்பு பணிகள் மேற்கொகள்ளப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை, துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (07.11.2023) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி மற்றும் புதன்சந்தை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெற்றுள்ள பகுதிகளில் 7ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story