குன்னூர் மலைப்பாதையில் யானைகள் முகாம் - வனத்துறை எச்சரிக்கை.

குன்னூர் மலைப்பாதையில் யானைகள் முகாம் - வனத்துறை எச்சரிக்கை.

முகாமிட்டுள்ள யானைகள் 

குன்னூர் மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் தற்பொழுது குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் அவ்வப்போது உணவு தேடி சாலைக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக இயக்கவும், யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story