பன்றிமலை பிரதான மலைச்சாலையில் ஒற்றை காட்டு யானை உலா

பன்றிமலை பிரதான மலைச்சாலையில் ஒற்றை காட்டு யானை உலா

காட்டு யானை உலா

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பன்றிமலை மலைச்சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் ஒன்றாக உள்ள பன்றிமலை மலைக்கிராமத்தில் ஒற்றை காட்டு யானை திடீரென உலா வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை சாலையில் நிறுத்தினர். இதனை வனத்துறை கவனம் செலுத்தி பெரும் அசாம்பவிதம் நடைபெறுவதற்கு முன் காட்டு யானைகளை மலைச்சாலைகளில் உலா வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story