தாளவாடி அருகே கூட்டமாக நடமாடும் யானைகள்

தாளவாடி அருகே கூட்டமாக நடமாடும் யானைகள்

யானைகள் நடமாட்டம்

தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக ரோட்டில் சுற்றி திரியும் யானைகள் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.
ஈரோடு மாவட்டம், சத்தி புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தற்போது கோடை வெயில் காரணமாக வனப்பகுதி காய்ந்து வருகிறது. இதன் காரணமாக யானைகள் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது அங்குள்ள வனச்சாலையை உணவு தண்ணீர் தேடி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது .இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்குட்பட் தலமலை - மகாராஜபுரம் ரோட்டில் சுமார் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றது. இதை அந்த வழியாகச் சென்ற சிலர் தங்கள் மொபைலில் வீடியோ எடுத்தனர் அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story