விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்

விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்
சேதமான தென்னை 
வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையை பகுதியை ஒட்டி அமைந்துள்ள வீரமுடையார் கோவில் பாதையில் விளை நிலங்களில் காட்டு யானைகள் நேற்று இரவு கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள சின்னமலுங்கு, ஹாரூன், மைதீன்பிச்சை, செய்யது ஆகியோருக்கு சொந்தமான தென்னை மற்றும் எலுமிச்சை தோப்புகளில் யானை கூட்டங்கள் நுழைந்து அங்குள்ள மரங்களை வேரோடு புடுங்கி எறிந்து சேதப்படுத்தி உள்ளன, உடனே வனத்துறை அதிகாரிகள் வந்து அந்த யானைகளை காட்டுப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story