பசுமை சாம்பியன் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பசுமை சாம்பியன் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர்

பெரம்லூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிறுவங்கள், தனிநபர்கள் பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணபிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த, தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அரசின் சார்பில் பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பணம் வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள் அடங்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க 15.04.2024 அன்று கடைசி நாள் ஆகும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அரியலூர். என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story