பத்ம விருது வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருது வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் 

பத்ம விருது வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மேன்மை பொருந்திய பணிகளுக்காக பத்ம விருது வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில் கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளான பத்ம விபூசன், பத்ம பூசன், மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்யாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய www.awards.gov.in மற்றும் www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்,

மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

Tags

Next Story