சாரய ஊறல் அழிப்பு - 5 பேர் மீது வழக்கு

சாரய ஊறல் அழிப்பு - 5 பேர் மீது வழக்கு

வழக்குப்பதிவு 

கல்வராயன்மலை பகுதியில் 7,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் சாராய ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, சிறுகளூர் மேற்குமலை வனப்பகுதியில், பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, தலா 300 லிட்டர் வீதம் 25 பேரல்களில் இருந்த 7,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். மேலும், 2 லாரி டியூப்களில் இருந்த 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, அமாவாசை மகன் ராஜா, தனபால் மகன் கருணாநிதி, மண்ணாங்கட்டி மகன்கள் அண்ணாமலை, வெங்கடேசன், ஏழுமலை ஆகிய 5 பேர் மீது கரியாலுார் போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

Tags

Next Story