சாலையோரத்தில் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்

சாலையோரத்தில் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்

சாலையோரத்தில் பள்ளம் சீரமைக்க வலியுறுத்தல்

சாலை வளைவு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாநகராட்சி 24வது வார்டு, சேர்மன் சாம்பசிவம் தெரு வழியாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தனியார் பள்ளி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு இல்லம், கே.எம்.வி., நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மழைநீர் வடிகால்வாய் ஒட்டியுள்ள சாலை வளைவு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story