மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
X

கேசவன்

கூடலூரில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் எல்லைத்தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 46). இவர் உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.இந்தநிலையில் நேற்று மாலை கேசவன், அப்பகுதியில் உள்ள தனது பழைய வீட்டுக்கு சென்றார். அங்கு பழுதடைந்த மின்கம்பிகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போதுதுருப்பிடித்த மின்கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.இதனை அறியாமல் கேசவன் அந்த மின்கம்பிகளை தொட்டு சரிசெய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், கேசவன் தூக்கிவீசப்பட்டார் இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக கேசவனை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கேசவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story