வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர் நிப்டி கல்லூரியில் நடைப்பெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பல நிறுவங்கள் பங்கேற்றன.
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்&டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருப்பூரில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களான 45&க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான மேனிபேக்சரிங் மெர்சண்டைசர், குவாலிட்டி கண்ட்ரோலர், அக்கவுண்டன்ட், டேட்டா என்ட்ரி, டிசைனிங் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் 300&க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள் நேர்முக தேர்வில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த வேலைவாய்ப்பின் முடிவில் 250 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிக்கான கடிதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story