ராசிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ராசிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமண ஆணைகளை இராஜேஸ்குமார் எம்.பி வழங்கினார்

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், காக்காவேரி முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் வழங்கினார். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தன்னார்வ பயிலும் வகுப்பு இலவச பயிற்சியில் கலந்து கொண்டு அரசு பணி பெற்ற 6 இளைஞர்களை பாராட்டி, பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து மகளிர் திட்டத்தின் மூலம் உதவி செவிலியர் பயிற்சி பெற தேர்வாகியுள்ள 10 மாணவிகளுக்கு ஆணைகளை வழங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 126 நிறுவனங்களை கொண்டும், 1800 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story