காஞ்சிபுரத்தில் வரும் 16ல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் 16ல் வேலைவாய்ப்பு முகாம்

பைல் படம்

காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம், வரும் 16ல் நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து, காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம், நாளை மறுதினம் நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்தவர்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்ய உள்ளன. எனவே, 18 - 35 வயது வரையுள்ள வேலை தேடுவோர், கல்வி சான்றிதழ்கள், புகைப்படம் உள்ளிட்டவைகளுடன், காலை 10:00 மணிக்கு நேரில் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story