தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்: 562 போ் தோ்வு

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்: 562 போ் தோ்வு

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

பல பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தென்காசியில் உள்ள இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி தலைமை வகித்தாா். தனுஷ் எம். குமாா் எம்.பி. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். முகாமில் 924 ஆண்கள், 1,312 பெண்கள், 12 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2,248 போ் கலந்துகொண்டனா். 102 வேலை வழங்குநா்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்குத் தோ்வானோரைத் தோ்வு செய்தனா். இதில், 227 ஆண்கள், 288 பெண்கள் உள்ளிட்ட 562 போ் வேலைவாய்ப்பு பெற்றனா். தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) (பொறுப்பு) சண்முகசுந்தா், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சையது முகம்மது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story