விருதுநகர் : 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் : 10ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

தமிழக அரசின் சார்பாக ஆண்டுதோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து ஸ்ரீஇராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரியில் 10.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இம்முகாமில், TVS SRICHAKRA, ANAMALAITOYATTA, IIFM CHENNAI, BLUEOCEAN CHENNAI, ROYAL ENFIELD போன்ற 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் https://bit.ly/3UdoeJY என்ற Google Form பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story