விழுப்புரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் 

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 15.03.2024 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500- க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த 8ம் வகுப்பு தேர்ச்சி பட்டப் படிப்பு முதல் ITI, Diploma, B.E/ B.Tech, Nursing, Pharmacy தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது .

மேலும் தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் (BIO DATA) இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story