3 ஆண்டுகளில் 6,662 பேருக்கு வேலை வாய்ப்பு

3 ஆண்டுகளில் 6,662 பேருக்கு வேலை வாய்ப்பு

திண்டுக்கல்லில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த முகாகளின் மூலம் 6,662 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

திண்டுக்கல்லில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த முகாகளின் மூலம் 6,662 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 6,662 பேர் வேலைவாய்ப்புப் பெற்றதாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 1,66,000 படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 19 சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், 6 மாபெரும் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 6,662 பேர் வேலைவாய்ப்பு பெற்று பயன் அடைந்திருக்கின்றனா் என்றாா் அவா்.

Tags

Next Story