அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு - அகற்றிய அதிகாரிகள்

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு  - அகற்றிய அதிகாரிகள்

ஆக்கிரமிப்பு அகற்றம் 

சங்ககிரி அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தில் அரசு நிலத்தில் செய்யபட்ட ஆக்கிரமிப்புகளை வருவாயத்துறையினர் அகற்றினர்.
சங்ககிரியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் கற்களை வைத்து சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து சங்ககிரி வருவாய் ஆய்வாளர் கீதா, சங்ககிரி கிராம நிர்வாக அலுவலர் ராஜலிங்கம் , கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் 0.30 சென்ட் நிலத்திலிருந்த ஆக்கிரமிப்பினை அகற்றி அரசு நிலத்தை மீட்டெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story