வேறு நபருடன் நிச்சயதார்த்தம் - கத்திமுனையில் காதலியை அழைத்து சென்ற காதலன்

வேறு நபருடன் நிச்சயதார்த்தம் - கத்திமுனையில் காதலியை அழைத்து சென்ற காதலன்

பைல் படம் 

சென்னை கேகே நகரில் திருமண நிச்சயதார்தத்தின் போது கத்தி முனையில் காதலியை அழைத்து சென்ற காதலன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கேகே நகர் ஜீவானந்தம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரோகித் இவரது மகளுக்கு வீட்டில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அவருடைய காதலன் சினிமா பாணியில் தனது நண்பர்களோடு காதலியின் வீட்டிற்கு சென்று கத்தியால் பெண்ணின் வீட்டாரை மிரட்டினார். டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கி விட்டு காதலியோடு தப்பி சென்றுள்ளார் இச்சம்பவம் குறித்து கேகே நகர் காவல் துறையினர் காதலன் அஜய் மற்றும் அவருடன் வந்த கும்பலை தேடி வருகின்றனர்.

Tags

Next Story