கண்டெய்னர் லாரி மோதி இன்ஜினியர் பலி

கண்டெய்னர் லாரி மோதி  இன்ஜினியர் பலி

விபத்து 

திண்டுக்கல் மாவட்டம் ,அணைபட்டி பெட்ரோல் பங்க் முன்பாக கண்டெய்னர் லாரி மோதி டூவீலரில் சென்ற இன்ஜினியர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் உதயகுமார் (36). அதே மாவட்டம் வேப்பிலைபட்டியை சேர்ந்தவர் சரவணன் (35). இருவரும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள். இவர்கள் சேலத்தில் இருந்து வேலூரை நோக்கி ஒரு கம்பெனியில் மிஷின் சர்வீஸ் செய்வதற்காக நேற்று டூவீலரில் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அணைபட்டி பெட்ரோல் பங்க் முன்பாக சென்றனர். அப்போது, சேலத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பார்சல் ஏற்றிக்கொண்டு, நாமக்கல் மாவட்டம் தட்டாரபாளையம் பழனிச்சாமி (48) என்பவர் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரி டூவீலரில் மோதியது.இதில் டூவீலரில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த உதயகுமார் உயிரிழந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story