ஆங்கில புத்தாண்டு ; விருதுநகரில் 1300 போலீசார் பாதுகாப்பு பணி

ஆங்கில புத்தாண்டு ; விருதுநகரில் 1300 போலீசார் பாதுகாப்பு பணி

எஸ்பி ஸ்ரீனிவாச பெருமாள்

ஆங்கில புத்தாண்டு தினத்தை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட 1300 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று இரவில் ரோட்டில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதிகாலை 1:00 மணிக்கு மேல் பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை எனவும், மாவட்டத்தில் உள்ள கோயில்கள், சர்ச்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புகள் செய்யப்பட்டு இருப்பதாகவும்,43 இடங்களில் வாகன சோதனை, 13 சோதனை சாவடிகள், 69 டூவீலர் ரோந்து, 22 கார்கள் ரோந்து, 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட இருப்பதாகவும், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. டூவீலரில் வேகமாக செல்வது, சாகசம் செய்யக்கூடாது. கேளிக்கை விடுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் போலீசாரின் அனைத்து நிபந்தனைகளுக்கும் பொருந்தும்.அன்றைய தினத்தில் மக்கள் அமைதிக்கு தீங்கு விளைத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story