என்மண் என்மக்கள் யாத்திரை: மகளிருக்கு அழைப்பு விடுத்த பாஜக

என்மண் என்மக்கள் யாத்திரை: மகளிருக்கு அழைப்பு விடுத்த பாஜக

அழைப்பிதழ் வழங்கிய பாஜகவினர்


புதுக்கோட்டை நகர மேளதாளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, வெற்றிலை-பாக்கு பூ,சந்தனம், குங்குமம், தாலிக்கயிறு, ஜாக்கெட் துணி ஆகியவற்றை அழகிய தட்டில் வைத்து, நவம்பர் 6ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் என்மண்-என்மக்கள் யாத்திரையில் பங்கேற்க அழைக்கும் அழைப்பிதழை, உழைக்கும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்தனர்.

புதுக்கோட்டை கீழ 3ம்வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் பாஜக மாவட்ட பொதுசெயலாளரும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி யாத்திரை பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன் தலைமையில் அண்ணாமலை அழைக்கிறார் என்ற பதாதையுடன் புதுக்கோட்டை நகர வீதிகளில் பாஜக நிர்வாகிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று,வீடு தோறும் மங்களகரமான பொருட்களை வழங்கி, சொந்த குடும்ப விசேஷத்திற்கு அழைப்பது போன்ற நூதனமான இந்த அணுகுமுறையை பொதுமக்கள் வரவேற்று ரசித்தனர்.

Tags

Next Story