கோபித்து சென்ற மனைவி - ஆட்டோ டிரைவர் தற்கொலை

கோபித்து சென்ற மனைவி - ஆட்டோ டிரைவர் தற்கொலை

பைல் படம் 

மயிலாடுதுறை அருகே தினமும் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் திருவாலங்காடு கீழ முக்கூட்டுப் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் உதயகுமார் 30 . இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார் இவரது மனைவி முத்து லட்சுமி. ஆட்டோ ஓட்டிவிட்டு வீட்டுக்கு வரும்போது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் வம்பு இழுப்பது வாடிக்கை .இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தன் மாமியார் வீட்டுக்கு சென்று என் குழந்தைகளுக்கு காது குத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். நீ குடித்துவிட்டு வம்பு வளர்ப்பதால் நாங்கள் காது குத்தும் நிகழ்ச்சியை வைக்க மாட்டோம் என்று மறுத்து விட்டனர்.

வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் வம்பு வளர்த்து அடித்துள்ளார். இதனால் அவரது மனைவி முத்துலட்சுமி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார், இதனால் மனம் உடைந்த உதயகுமார் வீட்டுக்குள் சென்று புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதயகுமாரின் தாயார் சரோஜா அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story